Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போனஸாக 5 வருட சம்பளம்.. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்..!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (16:50 IST)
உலகின் முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் 5 வருட சம்பளத்தை கொடுத்து முன்னணி நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. மைக்ரோசாப்ட், அமேசான், பிளிப்கார்ட், உள்பட பல நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது என்பது தெரிந்தது. பணவீக்கம் உள்பட பல காரணங்களால் செலவுகளை குறைப்பதற்காக நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது. 
 
இந்த நிலையில் தைவான் நாட்டைச் சேர்ந்த கப்பல் நிறுவனம் எவர் கிரீன் என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஐந்து வருட சம்பளத்தை போனசாக கொடுத்துள்ளது. 
 
ஊழியர்களின் செயல் திறனை பொறுத்து இந்த போனஸ் 3100 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments