Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்!
, வெள்ளி, 18 ஜூன் 2021 (13:02 IST)
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்து வரும் நிலையில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மழை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், அடுத்த இரு நாட்களில் சென்னை, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் – தமிழ்நாடு பாஜக தலைவர் கோரிக்கை!