Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதியுதவி - நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (10:17 IST)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார்.

 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. பல்வேறு மாநில அரசுகள், திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் உதவிகளை செய்து வருகின்றனர்.
 
தமிழ் நடிகர்களில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விக்ரம் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலரும் இதுவரை நிதியுதவி அளித்துள்ளனர்.
 
நடிகர் விஜய் 70 லட்சம் நிதியுதவியாக அளித்துள்ளார். அதேபோல், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சுஷாந்த சிங் ராஜ்புத், கேரள மக்களுக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார்.
 
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடியை நிதியாக அளிக்க முன்வந்துள்ளார். வருகிற 25ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அவர் ரூ.1 கோடியை அவர் வழங்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments