Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளா வெள்ள நிவாரண நிதி ! அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆசிரியர்களும் உதவி

கேரளா வெள்ள நிவாரண நிதி ! அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆசிரியர்களும் உதவி
, புதன், 22 ஆகஸ்ட் 2018 (17:52 IST)
கேரளா வெள்ள நிவாரண நிதி ! கரூர் அருகே அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களும் சேர்த்து கொடுத்த நிவாரணபொருட்கள்


கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ள  பேருக்கு ஏற்பட்டு லட்ச கணக்கான மக்கள் தண்ணீர் உணவு இன்றி  இன்றும் அவதியுற்று வருகின்றனர் . சமூக நல  அமைப்புகள் தன்னார்வு  தொண்டு  நிறுவனங்கள் நிவாரண உதவிகளை தமிழகத்தில் இருந்து அனுப்பு வைத்து வருகின்றனர் . இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் பரமத்தி  ஒன்றியத்தில் உள்ள தொட்டியபட்டி  அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி  சார்பில்   பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து கேரளா வெள்ள  நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பிவைத்தனர் . இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை  ஆசிரியர் கோ.மூர்த்தி  கூறுகையில் : பள்ளி மாணவர்கள் மத்தியில் மனிதநேய பண்புகளை வளர்க்க கேரளா வெள்ள  நிவாரண நிதி  மற்றும்  நிவாரண பொருட்களை அனுப்ப  முடிவு செய்த்து இப்பகுதி பொதுமக்களிடம் நிதி திரட்டி பள்ளியின் சார்பாக  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் ஆனா சிறு உதவியை செய்கிறோம் . கேரளாவில்  படிக்கும் மாணவர்கள்  பாதிக்கப்பட்டு  உள்ளதாக செய்திகளை அறிந்து  இங்கு படிக்கும் சில  மாணவர்கள் அங்கு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்து உள்ளனர்  .இதனை கேரளா மக்கள் ஏற்று கொள்ளவேண்டும்  என்றும் அவர்  கூறினார்.

பேட்டி :  கோ.மூர்த்தி – பள்ளி தலைமை ஆசிரியர் – தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூத்துக்குடி: கண் முன்னே காணாமல் போன கிராமம் - காரணம் என்ன? #GroundReport