இடைத்தேர்தலில் காட்டும் வேகத்தை நிவாரண பணிகளில் காட்டாதது ஏன்? ஆதவ் அர்ஜுனா கேள்வி

Siva
வியாழன், 5 டிசம்பர் 2024 (12:08 IST)
ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் கட்சியும் அமைச்சர்களும் காட்டும் வேகத்தை நிவாரண பணிகளில் காட்டாதது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்தாலும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவ்வப்போது தைரியமாக சில கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தரப்பு 20 பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்.பி. என்று பொறுப்பாளர்களை நியமனம் செய்து பம்பரம் போல் களப்பணியை மேற்கொள்கிறது.

தேர்தல் வெற்றிக்காக அவர்கள் காட்டும் ஆர்வத்தை பெரும் துயரில் மக்கள் சிக்கி உள்ள வேளையில் அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணிகள் கூட ஏன் காட்டவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுவதும், அதற்கு காரணங்களை மட்டுமே அரசு கூறி வருவது வாடிக்கையாக உள்ளது என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை திமுக கூட்டணி கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments