Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

Advertiesment
Tamil Nadu

Siva

, வியாழன், 5 டிசம்பர் 2024 (07:43 IST)
கள்ளக்குறிச்சி சாராய வழக்கை சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றி உத்தரவு பிறப்பித்த நிலையில் அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய காலதாமதம் ஆகும் என்றும் தமிழ்நாடு காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தனது மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

முன்னதாக கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மனுதாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பில் சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

கள்ளக்குறிச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!