Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராக்கெட்டில் இருந்த வெடிக்கும் பாகம் மாயம்: இஸ்ரோ அதிகாரிகள் பகீர்!!

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (13:29 IST)
புதுச்சேரியில் மீனவர்கள் மீன் பிடிக்கும் போது கிடைத்த ராக்கெட் பாகத்தின் வெடிக்கும் தன்மை கொண்ட பாகம் காணவில்லை என இஸ்ரோ அதிகாரிகள் பகீர் கிளப்பியுள்ளனர். 
 
புதுச்சேரியில் வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றபோது ஒரு பெரிய பொருள் அவர்களின் வலையில் தட்டுப்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அந்த பொருளை படகுகளில் வைத்து கரைக்கு எடுத்து வந்தனர்.
 
அதன் பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அது ராக்கெட்டில் உள்ள ஒரு பாகம் என கண்டறிந்தனர். அதாவது ராக்கெட்டை மேலே ஏந்திச்செல்ல பொருத்தப்படும் 5 எரிப்பொருள் உருளைகளில் ஒன்று என தெரியவந்தது. 
 
இந்த உருளைகள் ராக்கெட்டை சில தூரம் மேலே கொண்டு சென்ற சில நேரங்களில் தானாகவே ராக்கெட்டிலிருந்து பிரிந்து கடலுக்குள் விழுந்துவிடும். இதனை Strap on motor என அழைப்பார்கள். இது குறித்த தகவல் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனுப்பப்பட்டது. 
 
ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து இது குறித்து ஆராய அனுப்பப்பட்ட இஸ்ரோ அதிகாரிகள், பிஎஸ்எல்வி ராக்கெட்டிலிருந்து பிரிந்து கடலுக்குள் விழுந்த Strap on motor என தெரிவித்தனர். மேலும், அதில் இருந்து வெடிக்கும் தன்மை கொண்ட பாகம் ஒன்றை அதிகாரிகள் அகற்றினர். 
 
ஆனால், அதன் மற்றொரு பாகத்தை காணவில்லை என தெரிவித்தனர். வெடிக்கும் தன்மை கொண்ட பாகம் ஆபத்தானது என்பாதால் யாராவது எடுத்திருந்தால் கொடுத்துவிடுமாறும் எச்சரிக்கை செய்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments