Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அலர்ட்டா இருந்துக்கோங்க டா .. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்டாம்!!

அலர்ட்டா இருந்துக்கோங்க டா .. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்டாம்!!
, சனி, 30 நவம்பர் 2019 (13:27 IST)
மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். 

 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. அதேபோல் இன்று அதிகாலை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. 
 
இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் காரணமாகவும் கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனோடு அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொருத்த வரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஹா ஓஹோனு ஏகத்துக்கும் சிஎம்-ஐ புகழ்ந்து தள்ளிய ரோஜா: குஷியில் ஈபிஸ்!