Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுமனை புகுவிழாவிற்கு தயாராக இருந்த 2 மாடி வீடு விழுந்து தரைமட்டம்: கதறியழுத வீட்டின் உரிமையாளர்கள்..!

Mahendran
திங்கள், 22 ஜனவரி 2024 (16:35 IST)
புதுமனை புகு விழாவிற்கு தயாராக இருந்த இரண்டு மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமான  சம்பவம் வீட்டின் உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து வீட்டின் உரிமையாளர்கள் இடிந்த கட்டடத்தை பார்த்து கதறி அழுத காட்சி கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது. 
 
புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் அருகே இரண்டு மாடி கட்டிடம் ஒன்று சமீபத்தில் கட்டப்பட்டது. தான் சேர்த்து வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் கடன் வாங்கி இந்த வீட்டை அந்த வீட்டின் உரிமையாளர்கள் கட்டியதாக தெரிகிறது. 
 
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி புதுமனை புகுவிழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென கால்வாயில்  அதிக தண்ணீர் வந்ததை அடுத்து இந்த வீடு திடீரென ஆட்டம் கண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் உரிமையாளரிடம் போய் சொன்ன போது வீட்டில் உரிமையாளர்கள் வந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த வீடு தரைமட்டமாகியது. இதை பார்த்து வீட்டின் உரிமையாளர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு! ஒரே ஆட்சியில் மூன்றாவது தேர்தலை சந்திக்கும் தொகுதி!

பசிக்குது சீக்கிரம் முடிப்பான்னு அமைச்சர் ஒருமையில் சொல்கிறார்: வேல்முருகன் ஆதங்கம்..!

சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம்: என்ன காரணம்?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments