Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் பங்கேற்கும் நிகழ்ச்சி- அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவு

Sinoj
சனி, 13 ஜனவரி 2024 (12:40 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக நிறுவனரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி, வரும்  ஜனவரி 19 ஆம் தேதி ஆர்.கே. நகர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.

காவல் ஆய்வாளரிடம் அளித்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மனுவை அரசியல் காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின், சுண்ணாம்பு கால்வாய் திலகர்  நகரில் கூட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை என்று காவல்துறை தெரிவித்தது.

இந்த நிலையில், தண்டையார்பேட்டையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments