Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லீவ் லெட்டரில் உண்மையை கூறிய மாணவனுக்கு பாராட்டு..

Arun Prasath
வியாழன், 21 நவம்பர் 2019 (13:43 IST)
விடுப்பு கடிதத்தில் உண்மை காரணத்தை எழுதிய பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

பள்ளிகளில் விடுப்பு எடுப்பதற்காக விடுப்பு கடிதத்தில் காய்ச்சல், பாட்டி இறந்துவிட்டார் என பரவலாக ஒரே காரணத்தை தான் பல மாணவர்கள் எழுதுவார்கள். ஆனால் திருவாரூர் மாவட்டம் ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தீபக், தனது விடுப்பு கடிதத்தில் உண்மை காரணத்தை எழுதியுள்ளார்.

அதாவது தனது விடுப்பு கடிதத்தில், “நேற்று இரவு முழுவதும் ஊரில் நடைபெற்ற கபடி போட்டியை கண் விழித்து பார்த்ததால் உடல் சோர்வாக உள்ளது.ஆதலால் ஒரு நாள் எனக்கு விடுப்பு வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இதனை படித்த ஆசிரியருக்கோ அதிர்ச்சி.

பொய் காரணத்தை கூறி விடுமுறை எடுக்கும் பல மாணவர்களுக்கு மத்தியில் உண்மை காரணத்தை கூறி விடுமுறை எடுத்த தீபக்கை ஆசிரியர் பாராட்டியுள்ளார். மேலும் அந்த விடுப்பு கடிதத்தை வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். ஆதலால் சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தீபக் பள்ளியில் சிறந்த மாணவன் எனவும், கடந்த காலாண்டு தேர்வில்  90% மதிப்பெண் வாங்கியுள்ளார் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments