Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் கட்சியில் இருந்து விலகிய மேலும் ஒரு பிரபலம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (08:58 IST)
தமிழகத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முதலாக போட்டியிட்டது. இந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றாலும் ஓரளவுக்கு தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கமல்ஹாசன் உள்பட அக்கட்சியின் ஒருசிலர் எம்எல்ஏவாக சட்டமன்றத்தில் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் உள்பட கமல் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தது மட்டுமின்றி பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது சோகமான நிகழ்வாக இருந்தது 
 
இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் கமல் கட்சியில் இருந்து பல பிரமுகர்கள் அடுத்தடுத்து விலகிய நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலம் விலகியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிட செயலாளராக இருந்த பூவை ஜெகதீஷ் என்பவர் தற்போது அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஜாதி பாகுபாடு அதிகம் இருப்பதாகவும் அதனால் அக்கட்சியிலிருந்து தான் விலகுவதாகவும் அவர் பேட்டி அளித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments