Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு பூஞ்சை பாதிப்பு… மூன்று சிறுமிகளின் கண்கள் நீக்கம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (08:44 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளின் கண்கள் அறுவை சிகிச்சை மூலமாக நீக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சைப் பலனளிக்காமல் சிலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளின் கண்கள் தீவிர பாதிப்புக்கு உள்ளானதால் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments