Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூந்தமல்லி துணிக்கடையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா! - சென்னையில் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (11:39 IST)
சென்னை பூந்தமல்லியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரியும் 50 ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 70 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. சமீப காலமாக முழு முடக்கம், கடுமையான கட்டுபாடுகள் முதலானவற்றை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்ததன் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக தெரிய வந்துள்ளது. சுமார் 100 ஊழியர்கள் பணிபுரியும் அந்த துணிக்கடையில் உள்ள 60 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 50 பேருக்கு கொரோன உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், துணிக்கடையும் அதிகாரிகள் மூடியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments