Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரையில் உச்சம் தொடும் கொரோனா! – ஒரே நாளில் 320 பேர் பாதிப்பு!

Advertiesment
Tamilnadu
, வியாழன், 16 ஜூலை 2020 (10:42 IST)
மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் 320 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. ஆரம்பத்தில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்த நிலையில் தற்போது மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் 320 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் மதுரையில் கொரோனா பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 7,651 ஆக உயர்ந்துள்ளது. 3,885 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3,347 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் இந்தியாவின் மூன்று பகுதிகளில் நிலநடுக்கம்! – மக்கள் அதிர்ச்சி!