Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் போலி மது ஆலை.. திருச்செங்கோடு பகுதியில் 5 பேர் கைது

Mahendran
புதன், 3 ஏப்ரல் 2024 (14:59 IST)
திருச்செங்கோடு பகுதியில் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் போலி மது ஆலை இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஐந்து பேருக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்களை அடுத்து போலீசார் அதிரடியாக சோதனை செய்ததில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் தொடர்புடைய சிலர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இது குறித்து காவல்துறையிடம் விசாரணை செய்து வருவதாகவும் முதல் கட்ட விசாரணையில் குடோனை வாடகைக்கு எடுத்து அதில் போலி மதுபானம் தயாரித்து 13 மதுபான கடைகளுக்கு இரவு நேர விற்பனைக்காக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது 
 
மேலும் 5400 லிட்டர் போலி மதுபானம்  பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஒரு இரண்டு சக்கர வாகனம் மற்றும் ஒரு மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments