Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுக்கு என் மீது எந்த அளவுக்கு பயம் இருந்தால் இப்படி விமர்சிப்பார்கள்: அண்ணாமலை

Mahendran
புதன், 3 ஏப்ரல் 2024 (14:54 IST)
திமுகவுக்கு என் மேல் எந்த அளவுக்கு பயம் இருந்தால் என்னை ஆட்டுக்குட்டி என விமர்சிப்பார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்

திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என விமர்சனம் செய்து வரும் நிலையில் அதற்கு அண்ணாமலை கோவையில் நடந்த கூட்டத்தில் பதிலடி கொடுத்துள்ளார்

திமுகவிற்கு என் மேல் எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை செய்வார்கள் என்றும் கச்சத்தீவு புகாரில் மக்களை திமுக ஏமாற்றி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்

தமிழக மக்களை திமுக வஞ்சித்துள்ளது என்றும் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதில் காங்கிரஸ் திமுக சதி உள்ளது என்றும் இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பங்கு உண்டு என்றும் தெரிவித்தார்

திமுகவின் போலி முத்திரையை நான் அம்பலப்படுத்தி வருவதால் தான் என் மீது அவர்களுக்கு பயம் இருக்கிறது என்றும் அதனால் தான் என்னை ஆட்டுக்குட்டி என்று விமர்சனம் செய்து வருகின்றனர் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments