Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (14:09 IST)
மதுரவாயல் இன்ஸ்பெக்டர் தனது கன்னத்தில் அறைந்து, வீட்டை விட்டு வெளியேற்றியதாக கண்ணீர் பேட்டியளித்துள்ளார்.

 
சென்னை மதுரவாயலில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு எடுத்த தனது மகள் வனிதா, காலி செய்ய மறுப்பதாக நடிகர் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார் வனிதா விஜயகுமாரை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றினர். மேலும், அவரோடு அங்கு தங்கியிருந்த 8 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய வனிதா “எனது தந்தை விஜயகுமார் திரைப்படங்களில் நல்ல தகப்பன் போல் நடிக்கிறார். ஆனால், நிஜவாழ்வில் பெற்ற மகளை வீட்டிலிருந்து விரட்டி அடிக்கிறார். என் தாயும் இல்லை. காவல் நிலையம் வந்தால் இங்கு செல்.. அங்கு செல் என்கின்றனர். எங்கு செல்வது, எங்கு சென்று தங்குவது எனவே தெரியவில்லை. சினிமாகாரர்களுக்கு வீடு வாடகைக்கு யாரும் கொடுப்பதில்லை. நடுத்தெருவில் நிற்கிறேன். மதுரவாயல் இன்ஸ்பெக்டர் என் கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டு வெளியேற்றினார்” எனக்கூறி அவரின் கன்னத்தை காட்டி கண்ணீர் வடித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments