Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் கொரோனாவை விட மோசமானவன் – பஞ்ச் பேசிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (09:02 IST)
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதுடன். போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுதீஷ் என்பவர் ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றுக் கொண்டிருந்ததை கண்ட போலீஸார் அவரை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் போகாமல் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் “நான் கொரோனாவை விட மோசமானவன்” என சினிமாவில் வருவது போல பஞ்ச் வசனங்களை பேசியுள்ளார்.

இதனால் சுதீஷை ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments