இன்னும் சில மணி நேரங்களில் வலுவடையும் புரெவி! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (09:13 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் தென் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் மேலும் வலுவடைவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் தீவிரமடைந்த நிலையில் புயலாக மாறியுள்ளது. புரெவி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தென் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தற்போது பாம்பனிலிருந்து 530 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் 5 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், கேரள பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments