Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள் திறக்க கட்டுப்பாடு !

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (20:46 IST)
பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள் திறக்க கட்டுப்பாடு !

தமிழகத்தில் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில்தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  வரும் ஞாயிற்றுகிழமை முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2. 30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் - முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், காய்கறி உள்ளிட்ட சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள்  மாலை ஆறு மணி முதல் காலை 6 மண்இ வரை மட்டுமே  இயங்கும்.

மருந்தகங்கள்,  உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கி, ஜோமோட்டோ , உபேர் நிறுவனங்கள் உணவு விநியோகிக்க நேர கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது.அதில் காலை 7 முதல் 9: 30 மணி வரை; மதியம் 12 முதல் 2: 30 மணி வரை: மாலை 6 முதல் 9 மணி வரை ஆகும்.

விளைபொருட்களை  180 நாட்கள் சேமிப்புக் கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம், சேமிப்புக் கிடங்கிற்கான வாடகைக் கட்டணத்தை  30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பெட்ரொல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2: 30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments