Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பெட்ரோலை விட அதிகமாக உயர்ந்த டீசல் விலை: பொதுமக்கள் அதிருப்தி!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (06:39 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர் 
இருப்பினும் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் மத்திய அரசு தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வருவதால் காய்கறிகள் மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை 27 காசுகளும் டீசல் விலை 32 காசுகள் உயர்ந்து உள்ளன என்பதும் பெட்ரோல் விலையை விட டீசல் விலை 5 காசுகள் அதிகமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 91.98 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை 27 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 91.98 ரூபாய் என விற்பனையாகிறது. அதேபோல், சென்னையில் நேற்று டீசல் லிட்டர் 85.31 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று டீசல் விலை 32 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 85.63 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments