Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு கிலோ கறிவேப்பிலை 100 ரூபாயா? – மதுரையில் அதிர்ச்சி!

ஒரு கிலோ கறிவேப்பிலை 100 ரூபாயா? – மதுரையில் அதிர்ச்சி!
, வியாழன், 18 பிப்ரவரி 2021 (11:32 IST)
இந்தியா முழுவதும் சமீபத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த நிலையில் காய்கறி விலை உயர்வை சந்தித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை எட்டியுள்ளது. இந்த பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில் எரிப்பொருள் விலையேற்றம் காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் கறிவேப்பிலையில் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. இன்று மதுரை மார்க்கெட்டுகளில் கிலோ கறிவேப்பிலையின் விலை ரூ.100க்கு விற்பனையானதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேட்புமனு கொடுத்தவர்களுக்கு மார்ச் 2ம் தேதி நேர்காணல்: ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பு!