பேரறிவாளன் பரோல் இன்றுடன் முடிகிறது! தமிழக அரசு அவசர பரிசீலனை

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (11:21 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தந்தையின் உடல்நிலை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி ஒருமாத பரோலில் விடுதலையானார். அவருடைய பரோல் தேதி செப்டம்பர் 24ஆம் தேதியுடன் முடிவடைந்தாலும், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோளுக்கு இணங்கி மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.



 
 
இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட பரோலும் இன்றுடன் முடிவடைவதால் அவர் சிறை திரும்ப வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பேரறிவாளனின் தந்தை இன்னும் சிகிச்சை பெற்று வருவதால் மேலும் ஒரு மாதம் பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து அற்புதம்மாள் மனு கொடுத்துள்ளார்
 
இன்று பேரறிவாளனின் பரோல் முடிவடையவுள்ள நிலையில் அற்புதம்மாளின் மனு குறித்து தமிழக அரசு அவசர ஆலோசனை செய்து வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சிலமணி நேரங்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

அடுத்த கட்டுரையில்
Show comments