Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டும் குழியுமாக மாறிய மரண சாலை..! கொட்டும் மழையில் மக்கள் போராட்டம்..!!

Senthil Velan
வியாழன், 4 ஜனவரி 2024 (16:02 IST)
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கடந்த 8 ஆண்டுகளாக சாலை சீரமைக்காததை கண்டித்து கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெதூர் ஊராட்சி விட தண்டலம் அரசூர் வழியாக செல்லும் சாலையானது கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாகியும்  முறையாக சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டும் அவ்வழியாக செல்லும் பேருந்தும் முறையாக இயக்கப்படாததால் பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாமல் அவதி  அடைந்து வந்தனர்.
ALSO READ: வாடிவாசலை தெறிக்கவிடப்போகும் காளைகள்.. ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு..!!
 
இதுகுறித்து பலமுறை ஆட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

கொட்டும் மழையிலும் தங்கள் போராட்டத்தை கிராம மக்கள் தொடர்ந்தனர். தங்கள் கோரிக்கையை அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments