Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிவாசலை தெறிக்கவிடப்போகும் காளைகள்.. ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு..!!

Senthil Velan
வியாழன், 4 ஜனவரி 2024 (15:36 IST)
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
 
உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வருடந்தோறும் தைத்திங்களில் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்த வருடமும் அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள திடலில் 15-ஆம் (திங்கட்கிழமை) தேதியும், பாலமேடு பேரூராட்சியில் மஞ்சமலை ஆறு திடலில் 16-ஆம் (செவ்வாய் கிழமை) தேதியும் மற்றும் அலங்காநல்லூர் பேரூராட்சியில் கோட்டைமுனி வாசல் மந்தை திடலில் 17-ஆம் (புதன் கிழமை) தேதியும் நடைபெறவுள்ளது.
ALSO READ: திருமண மண்டபத்தில் கைவரிசை..! தங்க நகை திருடிய நபர் கைது..!!
 
வருடந்தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும் அந்தந்த இடங்களிலேயே இந்த வருடமும் சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
 
இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்து சம்மந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் இறங்கிய தங்கம்.. இன்னும் இறங்குமா?

தொலைந்த செல்போன்களை கண்டுபிடித்து தரும் செயலி.. இதுவரை 5 லட்சம் செல்போன் கண்டுபிடிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பயப்படாத பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

விழாவுக்கு கூப்பிட்டு விமர்சித்த சித்தராமையா! டென்ஷன் ஆன மோடி!

5 எம்பிக்கள் பயணம் செய்த விமானம் நடுவானில் திடீர் இயந்திர கோளாறு.. சென்னையில் தரையிறக்கம்..!

அடுத்த கட்டுரையில்