Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலில் பேனா தேவைதானா? அமைச்சர் பதில்!

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2022 (15:37 IST)
கலைஞர் நினைவாக கடலில் பேனா வடிவ சிலை அமைப்பது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் என அமைச்சர் பேட்டி.

 
மெரினா கடலுக்கு நடுவே ரூபாய் 80 கோடி செலவில் 134 அடி உயரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா வடிவத்தில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக 650 மீட்டர் கண்ணாடி பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் இந்த திட்டத்தின் பணி விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கலைஞர் நினைவாக கடலில் பேனா வடிவ சிலை அமைப்பது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான்; புதிய அறிவிப்பு இல்லை.

பேனாவின் வடிவம் எப்படி அமைய உள்ளது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது கலைஞருக்கு மக்கள் செய்யும் நன்றிக் கடன் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments