Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சீமான் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்”.. வெளுத்துகட்டும் அதிமுக அமைச்சர்

Arun Prasath
வியாழன், 17 அக்டோபர் 2019 (11:45 IST)
சீமான் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுபவர் என தமிழக கைத்தறித்துறை அமைச்சர் பேசியுள்ளார்.

சமீபத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது சரியே என்பது போல் பேசி சர்ச்சையை கிளப்பினார்.

இதனை தொடர்ந்து அவர் மீது, தேசிய ஒருமைப்பாட்டை சீர்குழைத்தல், மற்றும் வன்முறையை தூண்டுகள் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சீமானின் இந்த சர்ச்சை பேச்சை காங்கிரஸாரும் அதிமுகவினரும் கண்டித்து வருகின்றனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுகவை சேர்ந்த துரைமுருகன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சீமான் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிற ஒரு மனிதர், ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அவர் பேசியது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலை சார்ந்து தமிழகத்தில் போராடும் அமைப்புகள் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் பிரபாகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிவரும் நிலையில், அதே தமிழ் தேசிய கொள்கையோடு அரசியலில் களமிறங்கியிருக்கும் சீமான், விடுதலை புலிகள் ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரியே என்பது போல் கூறியது இதர அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது- எல்.முருகன் குற்றச்சாட்டு!

மக்கள் அதிகம் விரும்பும் கருப்பு நிற பைக் - அப்பாச்சி ஆர்டிஆர் 160 வாகனத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்த டிவிஎஸ் நிறுவனம்...

அடுத்த கட்டுரையில்
Show comments