Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவர் நைட் மழைக்கு இடிந்து விழுந்த கங்கை கொண்டான் மண்டபம்!

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (11:34 IST)
நள்ளிரவு துவங்கி விடிய விடிய பெய்த மழையினால் கங்கை கொண்டான் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 
 
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பாவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு துவங்கிய மழை அதிகாலை வ்ரை விடாமல் தொடர்ந்தது. 
 
இந்நிலையில், மாமல்லபுரத்தில் பெய்த தொடர் மழையால், பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்தல சயன பெருமாள் கோவிலுக்கு சொந்தமான பல நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கங்கை கொண்டான் மண்டபத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 
 
மேற்கூரை விழுந்தது மட்டும் அல்லாமல் தூண்களும் உள்வாங்கியதால் மண்டபம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து அறநிலையத்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் இதற்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
மழையால் இடிந்துள்ள இந்த மண்டபம் மிகவும் பழமையானது. எனவே, விரைவில் மண்டபத்தை பாதுகாப்பாக அகற்றி விரைவில் புதிய மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments