Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் அமிலக் கசிவை அகற்ற முடியாமல் திணறும் அதிகாரிகள்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (09:26 IST)
ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டிருக்கும் அமிலக் கசிவை சீர் செய்ய அதிகாரிகள் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி கலெக்டர், சந்தீப் நந்தூரி மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக மக்கள் பயப்படத் தேவையில்லை. இதை அப்புறப்படுத்தப்படும் பணி நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.
 
அதன் அடிப்படையில் நேற்று மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் உட்பட சிலர் கந்தக அமிலக் கிடங்கில் ஏற்பட்ட கசிவை சீர் செய்தனர். அப்போது பணியில் இருந்த காவலர் ஒருவர் மயங்கி விழுந்தார். 
 
இதனால் ஸ்டெர்லைட் அமிலக் கசிவை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். இரண்டாவது நாளாக கசிவை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கசிவை சரி செய்ய ஸ்டெர்லைட் பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments