Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதியை வாபஸ் பெற்றது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

Advertiesment
ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதியை வாபஸ் பெற்றது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
, செவ்வாய், 12 ஜூன் 2018 (16:51 IST)
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கான விரிவாக்க அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திரும்பப்பெற்றது.
 
கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன்பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தடை விதித்தது. 
 
இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து அங்குள்ள மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.
webdunia
 
இந்நிலையில், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2016ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாகத்திற்கு அளித்த அனுமதியை இன்று வாபஸ் பெற்றுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதைப்பொருள் வைத்திருந்த அரசு அதிகாரி - திண்டுக்கல்லில் அதிர்ச்சி