அண்ணாமலை - ஓபிஎஸ் திடீர் சந்திப்பு.. பாஜகவில் சேருகிறாரா?

Siva
திங்கள், 8 டிசம்பர் 2025 (08:22 IST)
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சந்தித்துப் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் ஓ. பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த நிலையில், அவர் பா.ஜ.க.வில் இணைவார் அல்லது தனிக்கட்சி ஆரம்பித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில், 'அ.தி.மு.க. தொண்டர்கள் மீட்புக் குழு' என்ற அமைப்பை வைத்துள்ள ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், கோவையில் நடந்த தனது அமைப்பின் செயலாளர் மோகன்ராஜ் என்பவரது இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார்.
 
அதே திருமண விழாவிற்கு அண்ணாமலையும் வந்திருந்தார். இதனை அடுத்து இருவரும் சந்தித்து கொண்டதாகவும், சில நிமிடங்கள் பேசியதாகவும் தெரிகிறது.
 
இரு தரப்பிலும் அரசியல் பேசவில்லை என்று கூறப்பட்டாலும், கண்டிப்பாக அரசியல் பேசி இருப்பார்கள் என்றும், பா.ஜ.க.வில் ஓ.பி.எஸ். இணைவது குறித்து ஆலோசித்திருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சொதப்பும் தவெக?!.. ஈரோட்டில் 75 ஆயிரம் பேர் கலந்துகொள்ள முடியுமா?...

தவெகவின் சின்னம் எனக்கு தெரியும்.. ஆனால் வெளியே செல்லக்கூடாது.. செங்கோட்டையன்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இன்று கும்பாபிஷேகம்.. குவியும் பக்தர்கள்..!

உலகின் இன்னொரு போர்.. தாய்லாந்து கம்போடியா நாடுகளில் தாக்குதல்..!

பணி நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க தேவையில்லை.. மக்களவையில் மசோதா..!

அடுத்த கட்டுரையில்