Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்தது: மொத்தம் எத்தனை பேர் போட்டி?

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (19:03 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மார்ச் 13 மற்றும் 14 ஆம் தேதி சனி ஞாயிறு என்பதால் அதன் பின் மீண்டும் 15ஆம் தேதி மீண்டும் தொடங்கியது
 
இந்த நிலையில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரை 5002 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆகிய 5002 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் இதில் ஆண்கள் 4 ஆயிரத்து 213 பேர்கள் பெண்கள் 787 பேர்களும் திருநங்கைகள் இரண்டு பேர்களும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் வேட்பு மனு வாபஸ் பெறும் தேதி முடிந்தவுடன் தேர்தல் ஆணையம் முறைப்படி இறுதி வேட்பாளர் பட்டியலை விரைவில் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments