சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

Prasanth Karthick
வியாழன், 28 நவம்பர் 2024 (10:24 IST)

ராமேஸ்வரத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட புதிய பாம்பன் ரயில் பாலம் தரம் குறைவாக உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையரே ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் பாலமானது இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் பாலமாகும். ஏற்கனவே உள்ள பாம்பன் பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய பாம்பன் பாலம் கட்டுவதற்கு 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் 2020ல் தொடங்கிய நிலையில் சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்து கடந்த அக்டோபர் முதல் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது.

 

இந்நிலையில்தான் பாம்பன் பாலத்தின் தரம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி சவுத்ரி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி, புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் கடல்நீர் அரிப்பு பிரச்சினையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை. தூண்களில் தற்போதே அரிப்பு தொடக்கம், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் அதிக ஒலி உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளன. புதிய பாலத்தில் குறைகளை மறு ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

 

அதை தொடர்ந்து பாம்பன் பாலத்தில் குறைகளை சரிசெய்யும் வரை ரயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கைகளும் எழத் தொடங்கியுள்ளன. புதிதாக கட்டப்பட்ட பாலம் இன்னும் திறக்கபடவே இல்லை. அதற்குள் இப்படி குறைகள் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments