Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதுக்குள்ள இன்னொன்னா? ஹாட்ரிக் அடிக்கும் புயல்!? மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (09:24 IST)
வங்க கடலில் உருவான புரெவி புயல் நாளைக்குள் கரையை கடக்க உள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் வங்க கடலில் உருவான நிவெர் புயல் காரைக்கால் அருகே கரையை கடந்தது. அது கரையை கடந்த அன்றே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக மாறியது. புரெவி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் இலங்கை வழியாக தற்போது கன்னியாக்குமரி – பாம்பன் இடையே கரையை கடக்க நெருங்கி வருகிறது. நாளைக்குள் புயல் கரையை கடக்கும் என்றும், கரையை கடக்கும் பகுதியில் 95 கி.மீ முதல் 100 கிமீ வரை சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை புரெவி கரை கடக்கும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வங்க கடலில் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமானை ஒட்டிய வங்க கடலில் உருவாகும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுமா என்பது வரும் நாட்களில் தெரிய வரும் என்றாலும், அடுத்தடுத்து புயல்கள் தமிழகம் நோக்கி கரையை கடப்பது மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments