மெட்ரோ ரயில் பயணிகளுக்கான புதிய வசதி..!!

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (15:47 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு புதிய வசதி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை கவரும் விதமாக ரயில் நிலையங்களில் இருந்து 6 முதல் 8 கி.மீ. தூரத்திற்கு செல்லும் வகையில் வாடகை கார் வசதியை அறிமுகபடுத்தி உள்ளனர். ரூ.10 கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணிகள் இந்த வசதியை எளிதில் பெறலாம். மொபைல் ஆப் மூலம் செல்லும் வாடகை காரில், இடம், நேரம் மற்றும் சீட் வசதியை புக் செய்து கொள்ளலாம்.

இந்த வாடகை கார் வசதியை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த கார்கள் மின்சார பேட்டரி மூலம் இயங்கக்கூடியவை. மேலும் மெட்ரோ நிர்வாகமும், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனமும் இந்த வசதிகளை வழங்கியுள்ளனர். இந்த வசதி அனைத்து மெட்ரோ நிலையங்களுக்கும் 3 மாதங்களில் விரிவுப்படுத்தப்படும் என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!.. ஈரான் போர் எதிரொலி!.. இந்தியாவில் மதுபான விலை உயர்வு!...

எங்கே என் பங்குன்னு கேட்க மாட்டேன்!.. தேர்தலில் போட்டியில்லை!.. கமல் அறிவிப்பு!...

நாங்க மட்டும் தக்காளி தொக்கா?!.. தேமுதிகவுக்கு 10 சீட்!. கோபத்தில் கூட்டணி கட்சிகள்!..

குடும்ப தலைவிக்கு ஒரு ஃபிரிட்ஜ்!.. அதிமுக தேர்தல் அறிக்கை!..

திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு சீட்!.. கரன்ட் அப்டேட்!....

அடுத்த கட்டுரையில்
Show comments