Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

Mahendran
செவ்வாய், 21 மே 2024 (10:20 IST)
திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை என பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து  நீலம் பண்பாட்டு மையம் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை, இதை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால்  படுகொலை செய்யப்பட்ட முத்துமனோவின் நண்பர்
பட்டியலின தேவேந்திர குலவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் தீபக்ராஜா பாளையங்கோட்டையில் உணவகத்திற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அவலம்
 
சக மனிதனை படுகொலை செய்யும் மறவர் சமூகத்தை சேர்ந்த சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக  எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கிட வேண்டும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்த பதிவுக்கு நெட்டிசன் பதிலடி கொடுத்த போது ’கொலை செய்யப்பட்டவர் ஒரு ரவுடி என்றும் அவர் மீது ஏகப்பட்ட கொலை வழக்குகள் இருக்கிறது என்றும் ஒரு கொலைகாரனுக்காக சாதிவெறி என்ற அம்சத்தை தூக்கிக் கொண்டு வருவது நியாயமல்ல என்றும் பதிவு செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேனியில் டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு! - மேலும் 5 சிறுவர்கள் சிகிச்சையில்..!

சென்னை மழையில் மக்கள் தத்தளிப்பு: பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் திமுக! - ஓபிஎஸ் விமர்சனம்!

ஏரியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற மாவை தூவியதாக குற்றசாட்டு: நடவடிக்கை எடுக்கப்படும் என -அமைச்சர் தாமோ.அன்பரசன் பதில்!

தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்....

திருப்பதியில் விடிய விடிய மழை: ஏழுமலையான் கோயில் முன்பு வெள்ளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments