Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவை இந்தியா கூட்டணியில் கருத்துவேறுபாடுகள் உள்ளது உண்மைதான்: நாராயணசாமி

Siva
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (08:16 IST)
புதுவை  மாநில இந்தியா கூட்டணியில்  எந்த வித விரிசலும் இல்லை என்றும் ஆனால் அதே சமயத்தில் கருத்து வேறுபாடுகள் உள்ளது உண்மைதான் என்றும் காங்கிரஸ் பிரமுகர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில்  எந்த விரிசலும் இல்லை என்றும் ஆனால் பாஜக கூட்டணியில் தான் அதிக விரிசல் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி  ராகுல் காந்தியின் அமைதியான பாதயாத்திரையை குலைக்க  பாஜக திட்டமிடுவதாக குற்றச்சாட்டு கூறினார்.  மேலும் காந்தியின் அறப்போராட்டத்தின் மூலமே சுதந்திரம் பெற்றோம் என்றும் அதை கொச்சை படுத்துற விதத்தில் பேசும் கவர்னரை கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார். 
 
ஆளுநர் தமிழிசை பாஜகவுக்கு விளம்பரம் தேடி வாக்கு சேகரிக்கிறார் என்றும் அது அவரது பதவிக்கு அழகல்ல என்றும் தெரிவித்தார்.

புதுவையை பொருத்தவரை இந்தியா கூட்டணியில் எந்த விதமான விரிசலும் இல்லை என்றும் ஆனால்  கருத்து கருத்து வேறுபாடுகள் உள்ளது என்றும் அதை தலைமை என்ன செய்கிறதோ அதன் மூலம் சரிப்படுத்துவோம் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments