Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பு விவசாயி சின்னம்: சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி மனு

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (19:48 IST)
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில் மற்ற கட்சிகளின் சின்னங்களை விட கரும்பு விவசாயி சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மங்கலாக இருப்பதாக சீமான் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின்போது குற்றஞ்சாட்டியிருந்தார்.
 
இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் 'கரும்பு விவசாயி' சின்னத்தை தெளிவாக புதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இதுகுறித்து தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், 'என்னை எதிர்கொள்ள முடியாமல் என்னுடைய சின்னத்தை மங்கலாக்கிவிட்டார்கள். விவசாயி சின்னத்தில் கூட வாழக்கூடாது என்று நினைக்கின்றனர். வாக்காளர்களே! வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த சின்னம் மங்கலாக இருக்கின்றதோ, அதில் உங்கள் வாக்கை செலுத்துங்கள்' என்று கூறினார்

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments