மோடியிடம், எதிர்க்கட்சி தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும்: பொன்னார்

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (19:31 IST)
பிரதமர் நரேந்திர மோடியிடம், எதிர்க்கட்சி தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்கள் தொகுதியில் வெற்றி பெற தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
அந்த வகையில் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொகுதி முழுவதும் சூறாவளி பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றார்.
 
இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட திருவட்டார் என்ற பகுதிகளில் அவர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் துணிச்சலான, தெளிவான முடிவுகளை எடுப்பதில் பிரதமர் நரேந்திர மோடியே வல்லவர் என்றும், அவரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பொன்.ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments