Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபித்துகொண்ட மனைவி; சமாதானம் பேச சென்ற கணவன் – மண்டையை உடைத்த மாமியார் !!!

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (12:35 IST)
தன்னிடம் சண்டைப் போட்டுக்கொண்டு கோபித்து சென்ற மனைவியை அழைக்க சென்ற கணவனை மாமியார் மண்டையை உடைத்துள்ளார்.

பேரையூர் அருகே வசித்து வரும் செல்வேந்திரனுக்கு வரலட்சுமி எனும் மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குடும்ப விஷயங்கள் காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்து வரலட்சுமி அவர் தாய் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

இதைப் போல 10 நாட்களுக்கு முன்னர் தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். 10 நாட்கள் ஆகியும் வராததால் செல்வேந்திரன் அவரை அழைத்துவர சென்றிருக்கிறார். ஆனால் வரமறுத்த வரலட்சுமி தனது தாயிடம் முறையிட்டிருக்கிறார். இதனால் மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து அதனால் செல்வேந்திரனைத் தாக்கியுள்ளார் மாமியார் வைரசிலை. இதனால் அடிபட்டு மருத்துவமனையில் சேர்ந்த செல்வேந்திரன் மனைவி மற்றும் மாமியார் மேல் புகார் கொடுக்க அவர்களைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் போலிஸார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments