Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார்: பெரியார் குறித்து முக ஸ்டாலின் டுவீட்

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (12:56 IST)
பெரியார் குறித்து முக ஸ்டாலின் டுவீட்
தமிழகத்தில் பெரியார் சிலைகளை அவ்வப்போது மர்ம நபர்கள் உடைத்தும் அவமதிப்பும் வரும் நிலையில் இன்று காலை கோவை மாவட்டம் சுந்தராபுரம் என்ற பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவிச்சாயம் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனைக் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்! அதனால்தான் அவர் பெரியார் என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
 
என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கர்ப்பிணி பெண்ணின் கண்ணீருக்கு பலன்! BSF வீரரை திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்!

லோகோவை மாற்றிய கூகுள்.. இனிமேல் தனித்தனியாக கிடையாது..!

லோன் ஆப் நெருக்கடி.. தாயிடமே தங்க செயினை பறித்த மகன்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

முன்கூட்டியே வெளியாகும் 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

இதுக்குதான் பொய்யை பரப்பினார்களா? சரிந்த ரஃபேல் பங்குகள்! சீன போர் விமான பங்குகள் உயர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments