Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்ம மேல நம்பிக்கை வைத்தவர்களுக்கு உதவ வேண்டும்! – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (10:35 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு உதவும் களப்பணியில் திமுக தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இரண்டு வார கால முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. எனினும் பலர் ஊரடங்கை சரியாக பின்பற்றாத சூழலில் ஊரடங்கை கடுமையாக பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய திமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் “தமிழகத்தை கொரோனா பாதிப்பில் இருந்து மீட்க திமுகவினர் களப்பணியாற்றிட வேண்டும்; தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் இது! ஒன்றிணைவோம் வா!” என அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments