Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்கு மட்டும் இவ்வளவு வேகமாக செயல்படுகிறார்கள்! – மு.க.ஸ்டாலின் காட்டம்

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (12:37 IST)
மாமல்லபுரத்தை சுத்தம் செய்ய இவ்வளவு வேகம் காட்டிய அரசு மக்களின் தேவையை நிறைவேற்றவில்லை என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் சுற்றுபயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பேசிய அவர் “பிரதமர் வருகையையொட்டி ஒரே வாரத்தில் மாமல்லபுரத்தை சுத்தம் செய்த அதிமுக அரசு, 8 ஆண்டுகளாகியும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏன்” என கேள்வியெழுப்பியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சி அமைத்த பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments