ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி; திமுக பிரம்மாண்ட மாநாடு!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (09:50 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திமுக நடத்த உள்ள பிரம்மாண்ட மாநாட்டில் மு.க.ஸ்டாலின் – ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் திமுக தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்திய நிலையில் அடுத்து சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சேலத்தில் மார்ச் 28ல் நடத்த திட்டமிட்டுள்ள இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியும் கலந்து கொள்ளவுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி இருவரும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments