Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக ஆட்சி அமைக்குமா என தெரியாது: செல்லூர் ராஜு பகீர் பேட்டி!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (09:03 IST)
அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது பற்றி இப்போது கூற முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் என அரசியல் களத்தை பரபரப்பாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாக சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. 
 
இருப்பினும் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது சமீபத்திய பேட்டியில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது பற்றி இப்போது கூற முடியாது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முதல்வர், துணைமுதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். 
 
அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது பற்றி இப்போது கூற முடியாது. இப்போது மக்களை சந்திக்க போகிறோம். நாங்கள் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்கள்தான் எஜமானர்கள் என அவர் பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments