பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

Mahendran
வெள்ளி, 6 ஜூன் 2025 (16:39 IST)
பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார் என அமைச்சர் ரகுபதி குற்றம் காட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தொகுதி மறு சீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்றும், தொகுதி மறு சீரமைப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் முன்னரே எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொகுதி மறு சீரமைப்பு குறித்த கருத்தை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பூச்சாண்டி வேலையை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், "தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். ஒரு வகையிலாவது அவர் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இதுவரை பேசி இருக்கிறாரா?
 
மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் பேசினேன்' என கலர் கலராக ரீல் விடுகிறார். அவர், கமலாலயத்தின் கருத்தை தன்னுடைய கருத்தாக பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்," என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
 
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments