Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

Advertiesment
Nainar Nagendran

Mahendran

, வெள்ளி, 6 ஜூன் 2025 (12:28 IST)
நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திப்பவர் ஆடிட்டர் குருமூர்த்தி என்றும், அவர் ஒரு தேசியவாதி என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
நேற்று ஆடிட்டர் குருமூர்த்தி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களை சந்தித்தார் என்பதும், இருவரும் சில மணி நேரம் ஆலோசனை செய்ததாகவும் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து, பாமக உட்கட்சி பிரச்சனைகளில் பாஜக தலையிடுகிறது என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.
 
"ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுவான மனிதர். நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்கக்கூடிய ஒரு தேசியவாதி. அவர் நல்ல விஷயங்களில் மட்டும் தான் தலையிடுவார்," என்று கூறினார்.
 
மேலும், அமித்ஷா – அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை எந்த திட்டமும் இல்லை என்றும், அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
 
மேலும், "ராமதாஸ் – அன்புமணி பேச்சு வார்த்தையில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை," என்று தெரிவித்த அவர், "இந்த பிரச்சனையை அவர்கள் இருவருமே பேசி சரி செய்துவிடுவார்கள்," என்றும் கூறினார்.
 
அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள் என்றும் அவர் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!