Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

Siva
வெள்ளி, 6 ஜூன் 2025 (16:05 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக   மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதை அடுத்து, கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் மாஸ்க் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. 
 
இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் பரவி வருகிறது என்பதும், பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில், இன்று விழுப்புரத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி தியாகராஜன் என்பவர், காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், இன்று அவர் சிகிச்சையின் பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
 
இந்த சூழலில், கொரோனா தொற்றில் இருந்து கர்ப்பிணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. கூட்டம் அதிகமாகும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், உங்கள் பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments