Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் நீட் விலக்கு கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (08:59 IST)
விரைவில் தமிழகத்திற்கு நீட் விலக்கு கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் இன்று பேட்டி அளித்த போது தெரிவித்துள்ளார்.
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ கல்விக்காக நீட் என்ற நுழைவுத்தேர்வு நடைபெற்று வருகிறது என்பதும் தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஆதரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்திலும் கூட அரசியல்வாதிகள் மட்டுமே நீட் தேர்வை எதிர்த்து வருவதாகவும் மாணவர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்த நடவடிக்கை எடுத்துவரும் தமிழக அரசு விரைவில் நீட் விலக்கு கிடைக்கும் என அமைச்சர் சுப்பிரமணியன் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார் 
 
நீட் விலக்கு விவகாரம் சாதுர்யமாக கையாளப்பட்டு வருகிறது என்றும் விரைவில் தமிழகத்திற்கு  நீட் விலக்கு கிடைக்கும் என்று நம்புவோம் என்றும் அவர் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியவாறே தமிழகத்திற்கு நீட் விலக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments